Sunday, December 18, 2011

பேச்சுப்பயிற்சி வகுப்பு

நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் அழகிய அழைப்பு பணியினை செவ்வனே செய்வதற்கு பேச்சுக்கலை ஒரு முக்கிய அம்சம். அந்த பேச்சுக்கலையினை ஏகத்துவ சகோதரர்கள் அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் சார்பாக பேச்சுப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளையில் நடைபெற்று வரும் இந்த வகுப்பில் சென்ற 16.12.2011 அன்று  சகோ.நவாஸ் முன்னிலையில் இப்பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment