Saturday, March 24, 2012

அபுதாபி மர்க்கஸ் வாராந்திர சொற்பொழிவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மர்க்கஸில்  பிரதி வியாழன் தோறும் நடைபெற்று வரும் அமர்வில் சென்ற 15.03.2012 அன்று “நபிமார்களின் பிராத்தனையும் நமது பிராத்தனையும்” என்ற தலைப்பில் சகோ.முஹம்மது மன்சூர் அவர்கள் உரையாற்றினார்கள். ஏராளமான சகோதரர்கள் இந்த அமர்வில் கலந்துக்கொண்டனர்.

அபுதாபி மர்க்கஸில் நடைபெற்ற உம்ரா வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரகம் சார்பில் இந்த மாதம் உம்ரா பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் கலந்து கொள்ளும் உம்ரா பயணிகளுக்காகவும், தனிப்பட்ட முறையில் உம்ரா செல்லும் பயணிகளுக்காகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் சார்பில் உம்ரா பயிற்சி வகுப்பு சென்ற 16.03.2012 அன்று நடைபெற்றது. இந்த வகுப்பில் கலந்துக் கொண்டவர்களுக்கு சகோ.முஹம்மது ஷேக் அவர்கள் பயிற்சி அளித்தார்கள்.

அபுதாபி ஐகாட் சிட்டி கேம்ப் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளை சார்பாக கேம்புகளில் பயான் நடைபெற்று வருகிறது. சென்ற 15.03.2012 அன்று எம்கோ 12ம் நம்பர் கேம்பில் நடைபெற்ற மார்க்கச் சொற்ப்பொழிவில் சகோ. ஷேக் அவர்கள் “அல்லாஹ்வின் படைப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


ஐகாட் சிட்டி நிர்வாகிகளுக்கு பயிற்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளையில் சென்ற 16.03.2012 அன்று கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. நிர்வாகம் சம்மந்தமாகவும், அழைப்பு பணியை செவ்வனே செய்வது குறித்தும் மண்டல செயலாளர் சகோ.சிக்கந்தர் அவர்கள் பயிற்சி அளித்தார்கள். இந்த பயிற்சியில் ஐகாடி சிட்டிக் கிளை நிர்வாகிகள் மற்றும் கேம்ப் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

அல் மிஸ்க் கிளை வாராந்திர சொற்பொழிவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் அல் மிஸ்க் கிளை சார்பாக வாராந்திர சொற்பொழிவு பிரதி வியாழன் தோறும் நடைபெற்று வருகிறது. சென்ற 16.03.2012 அன்று அல் மிஸ்க் கிளையில் நடைபெற்ற மார்க்கச் சொற்ப்பொழிவில் சகோ.உஸ்மான்அவர்கள் “திருக்குர்ஆனின் சவால்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்த அமர்வின் இறுதியில் கலந்துக் கொண்ட சகோதரர்களிடம் மார்க்க கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதிலினை சொன்ன சகோதரர்களுக்கு மார்க்க விளக்க சிடிக்கள் (3) வழங்கப்பட்டன.


சிட்டி கிளையில் வாராந்திர குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளையில் வாரம் தோறும் குர்ஆன் வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புகளில் குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓதுவதற்க்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. சென்ற 13.03.2012 அன்று நடைபெற்ற வகுப்பில் சகோதரர் ஷாஹுல் அவர்கள் பாடம் நடத்தினார்கள். இந்த வகுப்பில் ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.

ஐகாட் சிட்டி வாராந்திர சொற்பொழிவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டி கிளையில் பிரதி வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றுவருகிறது. சென்ற 16.03.2012 வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் சகோ.அப்துஸ் ஸலாம் அவர்கள்"பொறுப்புகள் விசாரிக்கப்படும்”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்த அமர்வில் ஆர்வத்துடன் ஏராளமான சகோதரர்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். இந்த அமர்வில் கலந்துக் கொண்ட சகோதரர்களிடம் மார்க்கம் சம்மந்தமாக கேள்விக் கேட்கப்பட்டு சரியான பதிலினை சொன்ன மூன்று சகோதரர்களுக்கு மார்க்க விளக்க சிடிக்கள் (3) வழங்கப்பட்டது.